சென்னை – பெங்களூரு இடையேயான போட்டி: புழுதிப்புயல் காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது.
இப்போட்டிக்கான டாஸ் மாலை 7 மணிக்கு சுண்டப்படுவதாக இருந்தது. ஆனால், சார்ஜாவில் போட்டி நடைபெறும் மைதானத்தில் புழுதிப்புயல் வீசி வருகிறது. இதனால், இன்றைய போட்டியில் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.